அழைப்பு!

Friday, April 15, 2005

இஸ்லாமிய சேவை / தஃவா பணி / அழைப்பு பணி

இஸ்லாமிய சேவையின் முக்கியத்துவம்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''தனக்கு விருப்பமானதை தன் சகோதரருக்கும் விரும்பாதவரை யாரும் உண்மையான இறைநம்பிக்கையாளராக முடியாது''.

இஸ்லாமிய அழைப்பாளரின் பொறுப்பு
ஒரு இஸ்லாமிய அழைப்பாளர்; தன் சொந்த பொருளாதார ஆதாயத்தை விட தன் நேரம், செல்வம், சக்தி, ஆற்றல் ஆகிய அனைத்தையும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும், சமுதாயத்திற்கும் செலவிடுவதையே விரும்புவார், தேர்ந்தெடுப்பார்.

இஸ்லாம் தனிப்பட்ட முயற்சியை விட கூட்டு முயற்சியை, சேவையை ஆதரிக்கிறது.

''இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலை நிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர். மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாக) செலவு செய்வார்கள்''.அல்குர்ஆன் சூரா அஸ்ஸுரா 42:38

இஸ்லாமிய அழைப்பாளரின் பங்கு:
முஃமீனான ஆண்களும் முஃமீனான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதை செய்யத் தூண்டுகிறார்கள். தீயதை விட்டும் விலக்குகிறார்கள். தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்(ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுகிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் சூரா தவ்பா 9:71)

0 Comments:

Post a Comment

<< Home