அழைப்பு!

Friday, April 15, 2005

நேரம் / கால மேலாண்மை

உங்களுக்குத் தெரியுமா?

எது நீளமானதும், குறுகியதாகவும் உள்ளது? எது விரைவாகவும், அதே சமயத்தில் மெதுவாகவும் கடப்பது? எது அனைவரும் புறக்கணித்துவிட்டு பின்பு வருந்துவது? எதுவும் அதுவின்றி நடவாது; எது அனைத்துச் சிறிய காரியங்களையும் ஒதுக்கச்செய்து, அதன் பின்விளைவோ தீங்கானது? அது என்னவென்று நீங்கள் அறிவீர்களா?

அது தான் நேரம் - காலம் என அறியப்படுவது.நேரம் / காலம் கழியும் விதம் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலத்தில் என்னென்ன காரியங்களை செய்ய எவ்வளவு நேரம் செலவழிக்கிறான் என்பதை கீழ்வரும் அட்டவணை உணர்த்துகிறது.

செயல் செய்யும் நேரம்
காலணி அணியும் நேரம் 8 நாட்கள்
போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு காத்திருத்தல் 1 மாதம்
முடிவெட்டும் நேரம் 1 மாதம்
தொலைபேசி உரையாடல் 1 மாதம்
லிஃப்ட்களில் பயணம் செய்வது (பெரு நகரங்களில்) 3 மாதங்கள்
பல் துலக்குவது 3 மாதங்கள்
பேருந்து ஃ வாகனத்திற்கு காத்திருப்பது 5 மாதங்கள்
குளிக்கும் நேரம் 6 மாதங்கள்
புத்தகம் படிப்பது 2 வருடங்கள்
உண்பது 4 வருடங்கள்
அலுவலக / வியாபார வேலைகள் 9 வருடங்கள்
தொலைக்காட்சி பார்ப்பது 10 வருடங்கள்
தூக்கம் 20 வருடங்கள்

கால மேலாண்மைக்கு அரிய சில யோசனைகள் / நேரம் வீண் விரயமாவதை தடுக்க சில வழிமுறைகள்

தினமும் காலையில் அன்றைய தினம் செய்ய வேண்டிய காரியங்களைத் திட்டமிட்டு வரிசைப்படுத்தி ஒரு தாளில் எழுதி வைத்துக் கொண்டு, அதை சரிவர நிறைவேற்றுகிறோமா என அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளவும்.

_________________________________________________________
அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய அருமைமொழி ஒன்றை ஞாபகம் கொள்ளவும்.

'' எவருடைய இரண்டு நாட்களும் ஒன்று போல் - சமமாக உள்ளதோ (அதாவது நன்மை கூடி, தீமை குறையவில்லையோ) அவர் நிச்சயமாக வழிகேட்டில் உள்ளார் / நஷ்டவாளி ஆவார்'.

முடிவுரை :-
அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அம்ரு இப்னு மைமூன் அறிவிக்கக்கூடிய ஹதீஸ் திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
' ஐந்து விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்தி அவற்றைச் சீராக்கினால், அதையடுத்து வரும் ஐந்து விஷயங்கள் உங்களுக்கு எளிதாக இருக்கும்'.

1. நீங்கள் முதுமை அடையும் முன் உங்கள் இளமையைச் சரியாகப் பயன்படுத்துங்கள்

2. நீங்கள் நோயால் பீடிக்கப்படுமுன் உங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

3. நீங்கள் வறுமை அடையுமுன் உங்கள் செல்வத்தைச் சரியாகச் செலவழியுங்கள்.

4. உங்கள் பணிச்சுமை அதிகரிக்குமுன் உங்கள் ஒய்வு நேரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.

5. உங்களை மரணம் பீடிக்குமுன் உங்கள் வாழ்க்கையைச் சீராக, சரியாக, நல்வழியில் பயன்படுத்தி, ஈருலக வாழ்வில் வெற்றி பெறுங்கள்.

சிந்தியுங்கள் - செயல்படுத்துங்கள் - வெற்றி பெறுங்கள் இன்ஷா அல்லாஹ் !

0 Comments:

Post a Comment

<< Home