அழைப்பு!

Saturday, March 26, 2005

மத மாற்றம் அல்ல! மன மாற்றம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


மனித சமூகத்தின் ஓர் மைல் கல் ராஜ்குமார் பிரகாஷ் என்னைப் பற்றி :

நான் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகரத்தில் பிறந்தவன். எனது தந்தை பெயர் சு. பக்கிரிசாமி பிள்ளை. தாயார் பெயர் அஞ்சம்மாள். நான் ஐந்து சகோதரிகளுடனும் மூன்று சகோதரர்களுடனும் பிறந்தவன். நான் என் குடும்பத்தில் எட்டாவது நபர். நான் இந்து மதத்தை சார்ந்து இருந்தேன்.

இந்து மதம் பற்றி :

இந்து மதம் பல நூறு ஆண்டுகளாக இந்தியாவிலும் நேபாளத்திலும் உலகல் இன்னும் பல இடங்களில் பரவி இருக்கிறது. மனு என்று அழைக்கப்படுகின்ற ஒருவரால் ‘மனு தர்மம்’ என்னும் நூல் இயற்றப்பட்டு அதில் கூறப்படுகின்ற பிரதானமான ‘வர்ணாசிரம கொள்கை’ கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்துகள் திராவிடர்கள் ஆரியர்கள் என அழைக்கப்பட்டனர். 600 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட மனு தர்மம் வர்ணாசிரம கொள்கையை போதித்து இந்து மக்களிடத்தில் உயர்வு தாழ்வை ஏற்படுத்தி விட்டது. அதனால் பல நூறு ஜாதிகள் தோண்றியது. ஜாதிக்கு ஒரு கடவுள் என பல தெய்வக் கொள்கையும் தோன்றியது.

என் மனதில் ஏற்பட்ட மாற்றம்:

நான் 20 வயது கடந்த பிறகு கேரளாவில் இருக்கும் பிரசித்தி பெற்ற சபரிமலைக்கு சென்றேன். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து சென்ற அனுபவம் எனக்கு உண்டு. சபரிமலையில் தனித்தன்மையோடு விளங்கும் சபரி ஐயப்பன் விஷ்னு என்ற ஆணுக்கும் சிவன் என்ற ஆணுக்கும் பிறந்ததாக சொல்லப்படுவதை என் மனம் இயற்கைக்கு மாற்றமாக கருத துவங்கியது.

பழனிமலையில் இருக்கும் முருகன் ‘நவபாஷனம்’ என்று சொல்லப்படுகின்ற ஒன்பது வகை மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளின் கலவையோடு உண்டாக்கபட்ட கற்சிலை. அந்த முருகன் சிலைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் தொடர்ந்து செய்து வந்த காரணத்தினால் முருகனின் சிலை உடைந்துவிடும் அபாயம் ஏற்பட்டதால் பழனி தேவஸ்தானம் சிறிய வெண்கல சிலை ஒன்று செய்து அதற்கு அபிஷேகம் செய்யம் மாற்று ஏற்பாடு செய்யலானார்கள். என் மனதில் ஏற்பட்ட ஐயம் தன்னை காப்பாற்றிக் கொள்ளாத முருகன் என்னை எப்படி காப்பாற்றுவான்?

அடுத்து சிலை வழிபாடு. மனிதனால் செதுக்கபட்ட சிலைகளுக்கு நாம் ஏன் வணக்கம் செலுத்த வேண்டும். அந்த சிலையை விட அந்த சிலையை தத்ரூபமாக செதுக்கிய சிற்பி மேலானவாக தோன்றியது.

நாத்திகம்:

கடவுள் என்று யாரும் இருக்கமுடியாது என்ற நாத்திகத்தின்பால் என் கவனம் திரும்பியது. உடனே என் மனம் நிச்சயம் ஒரு கடவுள் (Super Power) இருக்கத்தான் வேண்டும். இல்லையேல் இந்த பிரபஞ்சம் சீராக செயல்பட முடியாது என எண்ணியது. கடவுள் இல்லை, கடவுளை கற்பிப்பவன் முட்டாள் என்று உரத்து கூறிய ஈ.வே.ரா. பெரியார் நிலை என்ன ஆனது? இன்று அவருடைய சிலைக்கு மாலை மரியாதை. இதை இறந்துவிட்ட பெரியார் உணர்ந்து கொள்வார் என என் மனம் ஏற்க மறுத்தது.

கிறிஸ்துவம் :

என் மனம் கிறிஸ்துவத்தின்பால் சென்றது. கிறிஸ்துவத்தின் இருபிரிவுகள் ஒன்று இயேசுவையும் மற்றொன்று இயேசுவின் தாயார் மர்யத்தையும் வணங்கி வரலாயினர். ஒருவன் தவறு செய்தவிட்டு பாதிரியிடம் சென்று பாவமன்னிப்பு பெறக்கூடிய நிலை மனிதனை பாவத்தில் இருந்து மீட்காமல் திரும்பத் திரும்ப செய்ய வழிவகுக்கிறது என என் சிற்றறிவுக்குப்பட்டது. இங்கு சிலை வணக்கம் என் மனதை நெருடியது.

இஸ்லாம் :

சிலைவழிபாட்டில் திருப்தி இல்லாத என் மனதிற்கு இஸ்லாம் சிலை வழிபாட்டை ஒழித்துவிட்டதை கண்டு ஆனந்தம் அடைந்தேன். இஸ்லாத்தில் தொழுகையில் உணவு உண்ணும் நிலை இன்னும் பல சூழலில் சகோதரத்துவம் வெளிப்பட்டது. முஸ்லிம்களிடையே சமத்துவம் நிலவியது. சாதிகள் இல்லை. அதனால் சாதி சண்டைகளும் மனித படுகொலைகளும் இல்லை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைவனின் திருத்தூதர் அன்றி இறைவனின் குமாரர் இல்லை. இந்த கொள்கைகள் என்னை இந்து மதத்தில் இருந்து வெளிப்படுத்தி நாத்திக கிறிஸ்துவ கொள்கைகளுக்குச் செல்ல துடித்த மனதிற்கு ஒரு கடிவாளமிட்டு ‘இஸ்லாம்’ மார்கத்தின்பால் என்னை அழைத்து வந்தது. எனது 25-ம் வயதில் ஷார்ஜா நகரில் நான் இஸ்லாத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.

மன மாற்றம் :

இஸ்லாம் ஓர் மதம் அல்ல. அது ஒரு மார்க்கம் மனித வாழ்க்கை சீர்படுத்த உகந்த வாழ்க்கை நெறி. அதனால் நான் மதமாற்றம் செய்யப்படவில்லை. மனமாற்றமே அடைந்தேன். இஸ்லாம் வாழ்வில் ஒரு மனிதன் சந்திக்கும் அனைத்து விசயங்களுக்கும் தீர்வு சொல்கிறது. குர்ஆனில் புதைந்து கிடக்கும் பல அறிவியல் உண்மைகள் இந்த வேதம் நிச்சயமாக தீர்க்கதரிசி முஹம்மது(ஸல்) அவர்களால் வழங்கப்பட்டது அல்ல. இது ஓர் இறைவனின் தெளிவான வழிகாட்டுதல் என விளங்க முடிந்தது.

முஸ்லிம்கள் பற்றி :

இஸ்லாம் கூறக்கூடிய வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றி நடப்பவர்கள் முஸ்லிம்கள் ஆவர். ஆனால் துரதிருஷ்டவசமாக பல முஸ்லிம்கள் இஸ்லாத்தின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக நடப்பதை பார்க்கிறோம். தமிழ்கூறும் சகோதர சகோதரிகளுக்கு நான் அன்போடு தெரிவித்துக் கொள்வது என்றவென்றால் நீங்கள் இஸ்லாத்தைப் பாருங்கள். இஸ்லாமியரைப் புரிந்து கொள்ள முயல வேண்டாம். நீங்கள் ஓர் இறையின் புனித வேதமான அல்குர்ஆனையும், முஹம்மது(ஸல்) அவர்களின் பொன் மொழிகளாகிய ஹதீஸையும் படித்து ஆய்வு செய்து உங்கள் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஆக்கிக் கொள்ள வேண்டுமாய் அன்போடு அழைக்கின்றேன்.

அன்பான வேண்டுகோள் :

முஸ்லிம் சகோதர சகோதரிகளே! இனியாவது இஸ்லாத்தை அனைத்து அம்சங்களிலும் பின்பற்றி நடப்போமாக! இன்னும் மாற்றுமத சகோதர சகோதரிகளுக்கு இந்த புனித பணியை அதாவது அழைப்புப்பணியை துரிதமாக செய்வோமாக என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அப்துர் ரஹ்மான் (ராஜ்குமார் பிரகாஷ்)
திருவாரூர்

0 Comments:

Post a Comment

<< Home