அழைப்பு!

Friday, April 15, 2005

வெற்றிக்கான படிகள் - (குறிப்புகள்)

வெற்றிக் கனிகள்

• மனிதகுல வரலாற்றில் மிகப்பெரும் சாதனையாளர், அனைத்துத் துறைகளிலும் வெற்றி கண்டவர் நமது கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் என்பது உலகறிந்த உண்மை.

• மைக்கேல் ஹார்ட் என்ற கிறித்துவ அறிஞர் உலக வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய மனிதர்களைப் பட்டியலிட்டு, ''தர நிர்ணயம்"" வழங்கிய போது முதலாவதாக அவர் தேர்ந்தெடுத்தது முஹம்மது (ஸல்) அவர்களைத் தான். அதற்கு அவர் கூறிய காரணம், “உலக வரலாற்றில் ஆன்மீகம் மற்றும் லௌகீகம் - உலகியல் ஆகிய இரு துறைகளிலும் ஒரு சேர வெற்றி கண்டவர் முஹம்மது நபியைத் தவிர வேறு எவரையும் நான் காணவில்லை" என்பதாகும்.

• திருக்குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தான் முழு மனித குலத்திற்கும் பின்பற்றத்தக்க முன் மாதிரியாக அறிவிக்கின்றது. உண்மையில் அவர் ஒருவர் தான் இம்மை மற்றும் மறுமை ஆகிய இரு வாழ்க்கையிலும் மனிதர்கள் வெற்றி அடைவதற்குரிய வழிமுறைகளைத் தெளிவாக நமக்கு வாழ்ந்து காண்பித்துள்ளார்.

• முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் படித்து அவர் வெற்றிகரமாக பின்பற்றிய கொள்கைகளை - செய்த நற்செயல்களை நாமும் பின்பற்றலாம். ஏனெனில், தோல்வியையும் வெற்றியாக மாற்றவல்ல சீரிய சிந்தனையாளராக அவர் விளங்கினார்.

• அவருடைய அனைத்துச் செயல்களும் நல்ல முடிவினை - வெற்றியை தருவதாக இருந்தன. அவர் தீமை மற்றும் தீய பின் விளைவுகளை ஏற்படுத்தும் காரியங்களை - செயல்களை விட்டு என்றுமே ஒதுங்கி இருந்தார்.

________________________________

1. முதல் கனி

தன்னால் செய்து முடியக்கூடிய செயல்களிலிருந்து ஆரம்பம் செய்வது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கக் கூடிய ஹதீஸ், புகாரியில் கீழ்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“எப்பொழுதெல்லாம் ஒரு விஷயம் குறித்து இரு கருத்துக்கள் நிலவுகிறதோ, அவற்றில் மிகவும் எளிதானதையே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.”

மிகவும் எளிதான இலகுவான வழியை தேர்ந்தெடுப்பது என்னவெனில் தன் ஆற்றலால் சக்தியால் செய்து முடிக்கக் கூடிய விஷயத்திலிருந்து ஆரம்பம் செய்வது. எவர் இவ்விதமாக தன் காரியங்களையும் செயல்களையும் ஆரம்பிக்கின்றாரோ அவர் தான் வெற்றி பெறுவார்.

2. இரண்டாவது கனி
பாதகத்தை, சாதகமாக மாற்றுவது.

இஸ்லாமிய ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்ப காலகட்டத்தில் மக்கா குறைஷிகளால் முஹம்மது நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய தோழர்களும் பெருந்துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். அச்சமயத்தில் இறைவன் திருமறையின் ஓர் வசனத்தை ஆறுதலாக இறக்கியருளினான்.

''ஒவ்வொரு துன்ப காலத்திற்கு பின்பும் இன்பம் - மகிழ்ச்சி உள்ளது. ஒவ்வொரு துன்ப காலத்திற்கு பின்பும் இன்பம் - மகிழ்ச்சி உள்ளது""அல்குர்ஆன் சூரா நஷ்ரஹ் 94 : 5 - 6

இவ்வசனம் நமக்கு உணர்த்துவது என்னவெனில் ஒருவர் எப்பொழுதெல்லாம் துன்பம் - துயரம் அனுபவிக்கிறாரோ அதைத் தொடர்ந்து இன்பம் நன்மை உறுதியாக வரவுள்ளது என நம்பி பொறுமையை கடைபிடிக்க வேண்டும். ஆகவே, துன்பம் - துயரத்தை உறுதியுடனும், துணிச்சலோடும் எதிர்கொண்டு, வரவிருக்கும் இன்பம் - நன்மையை எதிர்பார்த்துப் பொறுமையோடு இருப்பவரே வாழ்வில் வெற்றி பெறுவார்.

3. மூன்றாவது கனி
பணி இட மாற்றம் செய்வது.

எங்கு நமக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறதோ அங்கு நம்முடைய இருப்பிடத்தை மாற்றிக் கொள்வது. இது நமக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிஜ்ரா தரும் படிப்பினை. மக்காவிலிருந்து மதீனாவிற்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இடம் பெயர்ந்ததற்கு முக்கிய காரணம் மதீனாவில் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தலைமையில் கட்டுப்பட்டு வாழ விரும்பி முன் வந்ததாகும்.

4. நான்காவது கனி
எதிரியை அன்பால் வீழ்த்தி தோழனாக்கி கொள்வது

இஸ்லாமிய ஆரம்ப கால வரலாற்றில் மக்கத்துக் குறைஷிகளால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். அப்பொழுது இறைவன் தன் திருமறை குர்ஆன் மூலம் அறிவுறுத்துகிறான்.

''உமக்கு தீமையே செய்தவனுக்கும் நன்மை செய். அதன் மூலம் உம்முடைய பெரும் எதிரி கூட உம் உற்ற நண்பன் ஆவதை காண்பீர்". அல்குர்ஆன் சூரா ஃபுஸ்ஸிலத் 41: வசனம் 34

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் தன் அன்பிற்குரிய சிறிய தந்தை பாலைவனச் சிங்கம் ஹம்ஜா (ரலி) அவர்களை நயவஞ்சகமாக வீழ்த்தி, அவர் உடலைக் கூறுபோட்டு கேவலப்படுத்திய ஹிந்தா, மற்றும் பல போர்களுக்கு தலைமையேற்ற அபு சுஃப்யான் போன்றோரை மக்கா வெற்றிக்குப் பின்பு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெருந்தன்மையுடன் மன்னித்து விட்டனர். அதன் விளைவு அவர்கள் இருவரும் இஸ்லாத்தைத் தழுவி, நபியுடைய தோழி, தோழன் - சஹாபா (ரலி) ஆகினார்கள்.

இக்கொள்கையை என்றும் திருந்தாத கல் நெஞ்சக் கயவர்களிடம் பயன்படுத்த இயலாது. உதாரணம் அபு ஜஹ்ல்.

5. ஐந்தாவது கனி
நற்சந்தர்பங்களை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது.

சந்தர்ப்பம் - வாய்ப்பு ஒருவனுக்கு வாழ்க்கையில் ஒருமுறை தான் வரும். யார் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்கிறாரோ அவர் வெற்றி பெறுவார். இதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த எண்ணற்ற விஷயங்களில் ஒன்றைக் குறிப்பிடலாம். பத்ர் யுத்தத்திற்கு பின்பு முஸ்லிம்களிடம் 70 நிராகரிப்பாளர்கள் கைதிகளாக இருந்தனர். அவர்களில் பிணைத்தொகைக் கட்டினவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

பிணைத்தொகைக் கட்ட இயலாதவர்களுக்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் விடுதலைக்கு எளிய வழி ஒன்றைக் கூறினார்கள்.

• தவறுகளுக்கு அஞ்சுங்கள் / விமர்சனங்களை மதியுங்கள்.
உமர் (ரலி) கூறினார்கள் என்னுடைய “தவறுகளை / குறைகளை சுட்டிக்காட்டுபவர் மீது இறைவன் கருணை புரிவானாக.”

• தோல்விகளைக் கண்டு அஞ்சாதீர்கள்.
முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள். எந்த ஒரு முஃமீன் இறை நிராகரிப்பாளர்களோடு கலந்து உறவாடி, அவர்களுக்கு நன்மை செய்ய நாடி தோல்வி கண்டு புண்படுகிறாரோ அவர், நிராகரிப்பாளர்களோடு உறவாடாது ஒதுங்கி இருப்பவரை விட சிறந்தவர்.

• அவரவருக்குரிய மரியாதையை, கண்ணியத்தை கொடுங்கள்.
“யார் ஒரு மனிதருக்கு ஒரு பொறுப்பை, பதவியை அவரைவிட சிறந்தவர், தகுதியானவர் இருக்க,வழங்குகிறாரோ அவர் நிச்சயமாக, அல்லாஹ்வையும், அவன் தூதரையும், அனைத்து முஸ்லிம்களையும் ஏமாற்றியவராவார்”.- அல்ஹாதீம் மற்றும் இப்னுதைமிய்யா

• அழைப்பு பணியில் சிறக்க பொறுமை அவசியம்:
நிச்சயமாக உங்களை ஒரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள் மற்றும் கனி வர்க்கங்களின் இழப்பினாலும் நாம் சோதிப்போம். அச்சமயத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பவருக்கு(நபியே!) நற்செய்தி கூறுவீராக. பொறுமை உடைய அவர்கள் தங்களுக்கு துன்பம் ஏதேனும் பீடித்தால் “ நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கு உரியவர்கள். அவனிடமே நம் மீளுதலும் இருக்கிறது” என்று கூறுவர். இத்தகைய பொறுமையுடையோருக்கே இறைவன் அருளையும்,கருணையையும் வழங்குவான். இத்தகையோரே தம் இறைவனின் நல் வழியில் செல்வர்” அல்குர்ஆன் சூரா பகரா 2: 155 - 157

அல்லாஹ்வுடன் நம்மை நெருக்கமாக்கி வைக்கும் செயல்கள்:
அல்லாஹ் இறுதி தீர்ப்பு கியாம நாளில் கூறுவான்:-
“ஒ ஆதமின் மகனே! நான் நோயுற்றிருக்கும் போது நீ என்னை சந்தித்து ஆறுதல் அளிக்கவில்லையே!. அதற்கு அந்த மனிதன் கூறுவான்: ''யாஅல்லாஹ்! அகிலங்களின் இறைவனான உன்னை எவ்வாறு நான் சந்திக்க முடியும்?"" அதற்கு இறைவன் கூறுவான்: ''என்னுடைய இந்த அடியான் நோயுற்றிருந்ததை நீ அறியவில்லையா? அவனை நீ சந்தித்து ஆறுதல் கூறியிருந்தால், நிச்சயமாக அது என்னை சந்தித்ததற்கு சமமாகும்"".

''ஆதமின் மகனே! நான் பசியோடு உன்னை அணுகியபோது நீ எனக்கு உணவளிக்கவில்லையே!"" அதற்கு அம்மனிதன் கூறுவான்: ''யாஅல்லாஹ்! அகிலங்களின் இறைவனான உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க முடியும்?"" அதற்கு இறைவன் கூறுவான்: ''என்னுடைய இந்த அடியான் பசியோடு உன்னை அணுகி உணவு கேட்டானே, அவனுக்கு நீ உணவு அளித்திருந்தால், நிச்சயமாக அது எனக்கு உணவளித்ததற்கு சமமாகும்!".

''ஆதமுடைய மகனே! நான் தாகித்த நிலையில் உன்னிடம் வந்து நீர் கேட்ட போது, நீ தண்ணீர் அளிக்கவில்லையே!"" அதற்கு அம்மனிதன் கூறுவான்: ''யாஅல்லாஹ்! அகிலங்களின் இறைவனான உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர முடியும்?"" அதற்கு இறைவன் கூறுவான்: ''என்னுடைய இந்த அடியான் தாகித்த நிலையில் உன்னிடம் வந்து தண்ணீர் கேட்கவில்லையா? அப்போது நீ அவனுக்குத் தண்ணீர் புகட்டியிருந்தால் நிச்சயமாக அது எனக்குத் தண்ணீர் கொடுத்ததற்குச் சமமாகும்"".முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹ-ரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் - ஸஹீஹ் முஸ்லிம் எண் : 18

இந்த ஹதீஸ் நமக்கு தரும் படிப்பினை என்னவென்றால் தேவையுடையோர் நம்மை அணுகும் போது அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வது நம் தலையாய கடமையாகும்.

முக்கிய பண்புகள் / ஒழுக்கங்கள்
• தவிர்க்க வேண்டியவை
எதிலும் ஈடுபடாது ஒதுங்கிக் கொள்வது
நான் ஈடுபட விரும்பவில்லை என அடிக்கடி கூறுவது.
முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள் - “''இஸ்லாத்தில் துறவறத்திற்கு அனுமதி இல்லை"".

ஒரு கைதி 10 முஸ்லிம்களுக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுத்தால் விடுதலை செய்யப்படுவார் என அறிவித்தார்கள். இது தான் இஸ்லாமிய வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட முதல் அறிவொளி இயக்கம். அதன் மாணவர்களோ முஸ்லிம்கள். ஆசிரியர்களோ எதிரிப் படை நிராகரிப்பாளர்கள். இதை அறிந்த இங்கிலாந்து நாட்டு அறிஞர் ஒருவர் கூறுகின்றார்: ''தனக்கு வந்த கஷ்ட காலத்தையும் - எதிர்ப்பையும் திடமான மனத்துடன் எதிர்க்கொண்டு தோல்வியை வெற்றியாக மாற்றிக் காட்டியவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தான்" என்று புகழாரம் சூட்டினார்.

6. ஆறாவது கனி
பழி வாங்குவதைக் காட்டிலும் மன்னிப்பே சிறந்தது.

பழிவாங்கும் தன்மையைக் காட்டிலும் மன்னிக்கும் பண்பே சிறந்தது. மக்கா வெற்றி கொள்ளப்பட்டு,பல்லாயிரக்கணக்கான தன் தோழர்களோடு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவினுள் பிரவேசித்தார்கள். அப்பொழுது மக்காவிலிருந்த குறைஷி நிராகரிப்பாளர்கள் சொற்பத் தொகையினரே. அவர்கள் எல்லாம் பல ஆண்டுகள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்தம் தோழர்களுக்கும் பல்வேறு தொல்லைகள், துன்பங்கள் இழைத்தவர்கள். அவர்கள் எல்லாம், பெரும்படையுடன் மக்காவினுள் பிரவேசிக்கும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தம்மை பழிவாங்குவார்கள் என அஞ்சி தங்கள் வீடுகளுக்குள் முடங்கி, பயந்து கொண்டு இருந்தனர். ஆனால், பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களோ ''தவறு செய்த அனைவரையும் நான் மன்னித்து விட்டேன். நீங்கள் அச்சம் கொள்ளாது சுதந்திரமாக வெளியே வரலாம்", எனக்கூறி பொது மன்னிப்பு வழங்கினார்கள். அதன் பயன் - விளைவு என்ன தெரியுமா? அவருடைய எதிரிகள் நெஞ்சுருகி, எவரை ஒழித்துக் கட்டுவது, தம் வாழ்நாளின் குறிக்கோள் என்று கூறி வந்தனரோ செயல்பட்டனரோ, அவரையே தம் தலைவராக மனமுவந்து ஏற்றார்கள் - இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

0 Comments:

Post a Comment

<< Home