இஸ்லாம் - பிற வேதங்களில்...
மனித சமுதாயம் ஒரே இனமாக இருக்கும்போது, நாம் ஒருவரை யொருவர் நன்றே புரிந்து கொண்டுள்ளோமல்லவா? மனித இனம் முழுமைக்கும் இறைவன் கூறுகிறான்:
''உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை நான் இன்று முழுமையாக்கிவிட்டேன். மேலும், நான் உங்கள்மீது என்னுடைய அருட்கொடையை முழுமையாக்கிவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுங்கள். (அல் குர்ஆன்: 05:03)
1.ஏகத்துவம்: (மனித குலத்திற்கு ஒரே இறைவன்)
''அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவருமில்லை"" என்று (நபியே நீர்) கூறும்! (அல் குர்ஆன்: 112:1-4)
“ இந்த முக்குணங்களால் மயங்கி, மெய்ப்பொருளும் அழியா பொருளுமாகிய என்னை உலகம் காண்பதில்லை” (பகவத் கீதை 7:13)
“ என்னுடை யோக மாயயால் நான் மக்களின் கண்களுக்கு மூடப்பட்டு நிற்கிறேன். நான்தான் பிறப்பும் அழிவும் அற்ற பரம்பொருள் என்பதை அறிவற்றோர் அறியமாட்டார்கள்" (பகவத் கீதை 7:25)
"இறைவன் ஒரே ஒருவன் தான்! அவனை அட்டுமே வழிபடுங்கள்"
(ரிக் வேதம் 6:45:16)
‘இஸ்ரவேலே, கேள்! நம்முடைய தேவராகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.’ (உபாயம் 6:4)
கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே, கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (மாற்கு 12:29)
மேலும் கான்க: உபாகமம் 5:7-9, 6:4 யோவான் 5:37
2. தூதுத்துவம்:
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு புதிய தூதர் அல்ல. மாறாக அவரே இறைவனின் இறுதித் தூதராவார். முஹம்மத்(ஸல்) உங்கள் ஆடவர் களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால், அவரோ இறைவனின் தூதராகவும் தூதர்களுக்கெல்லாம் இறுதியானவராகவும் இருக்கிறார். அல் குர்ஆன் (33:40, 37:37, 16:36, 10:47, 13:7, 35:24, 13:38, 4:164, 40:78)
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வருகை பற்றிய முன்னறிவிப்பு:
முஹம்மத் என்னும் பெயரில் அந்நிய நாட்டிலிருந்து ஒரு ஆச்சாரியார் தன்னுடைய சீடர்களுடன் வருவார். (பவிஷ்யபுரானம் 3:3:3:5)
இன்னும் அனேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதா யிருக்கிறது, அவற்றை நீங்கள் இப்போழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாய் பேசாமல், தாம் கேள்வி பட்டவை யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப் படுத்துவார். (பைபிள் யோவான் 16:12…4) மேலும் காண்க: உபாகமம் 18:18,19 யோவான் 14:7,8)
3. மறுமை கோட்பாடு:
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆகவேண்டும். அன்றியும் இறுதி தீர்ப்பு நாளில்தான் உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும். எனவே, நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவரே வெற்றியடைவார். (அல் குர்ஆன் 3:185, 99:7-8, 67:2.)
நீ போரில் கொல்லப்பட்டால், சுவர்க்கம் அடைவாய். (பகவத்கீதை 2:37)
விவஸ்தை கெட்டுப்போன குலமும், கெட்டுப்போக செய்தவர்களும் நரகத்தை அடைவார்கள். (பகவத்கீதை 1:41)
உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத்தறித்து எறிந்து போடு. உனது சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயங்களில் ஒன்று கெட்டுப்போவது உணக்கு நலமாயிருக்கும். உன் வலதுகை உணக்கு இடரலுண்டாக்கினால், அதைத்தறித்து எறிந்துபோடு! உனது சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயங்களில் ஒன்று கெட்டுப் போவது உனக்கு நலமாயிருக்கும்.
(மத்தேயு 5:29 மாற்கு 9:43-47)
முடிவுரை:
உண்மையில் இது (திருக்குர்ஆன்) ஒரு நல்லுபதேசமாகும். எனவேää
விரும்புகிறவர் தம்முடைய இறைவனின் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். (அல் குர்ஆன் 76:29)
இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வகையான நிர்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் பிரிந்து தெளிவாகிவிட்டது. (அல் குர்ஆன் 2:258)
திருக்குர்ஆன் இறை வேதமாகும் இதில் சிறிதும் சந்தேகமில்லை.
0 Comments:
Post a Comment
<< Home