அழைப்பு!

Saturday, March 26, 2005

இஸ்லாம் - பிற வேதங்களில்...

மனித சமுதாயம் ஒரே இனமாக இருக்கும்போது, நாம் ஒருவரை யொருவர் நன்றே புரிந்து கொண்டுள்ளோமல்லவா? மனித இனம் முழுமைக்கும் இறைவன் கூறுகிறான்:

''உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை நான் இன்று முழுமையாக்கிவிட்டேன். மேலும், நான் உங்கள்மீது என்னுடைய அருட்கொடையை முழுமையாக்கிவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுங்கள். (அல் குர்ஆன்: 05:03)

1.ஏகத்துவம்: (மனித குலத்திற்கு ஒரே இறைவன்)

''அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவருமில்லை"" என்று (நபியே நீர்) கூறும்! (அல் குர்ஆன்: 112:1-4)

“ இந்த முக்குணங்களால் மயங்கி, மெய்ப்பொருளும் அழியா பொருளுமாகிய என்னை உலகம் காண்பதில்லை” (பகவத் கீதை 7:13)

“ என்னுடை யோக மாயயால் நான் மக்களின் கண்களுக்கு மூடப்பட்டு நிற்கிறேன். நான்தான் பிறப்பும் அழிவும் அற்ற பரம்பொருள் என்பதை அறிவற்றோர் அறியமாட்டார்கள்" (பகவத் கீதை 7:25)

"இறைவன் ஒரே ஒருவன் தான்! அவனை அட்டுமே வழிபடுங்கள்"
(ரிக் வேதம் 6:45:16)


‘இஸ்ரவேலே, கேள்! நம்முடைய தேவராகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.’ (உபாயம் 6:4)

கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே, கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (மாற்கு 12:29)
மேலும் கான்க: உபாகமம் 5:7-9, 6:4 யோவான் 5:37


2. தூதுத்துவம்:

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு புதிய தூதர் அல்ல. மாறாக அவரே இறைவனின் இறுதித் தூதராவார். முஹம்மத்(ஸல்) உங்கள் ஆடவர் களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. ஆனால், அவரோ இறைவனின் தூதராகவும் தூதர்களுக்கெல்லாம் இறுதியானவராகவும் இருக்கிறார். அல் குர்ஆன் (33:40, 37:37, 16:36, 10:47, 13:7, 35:24, 13:38, 4:164, 40:78)

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வருகை பற்றிய முன்னறிவிப்பு:
முஹம்மத் என்னும் பெயரில் அந்நிய நாட்டிலிருந்து ஒரு ஆச்சாரியார் தன்னுடைய சீடர்களுடன் வருவார். (பவிஷ்யபுரானம் 3:3:3:5)

இன்னும் அனேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதா யிருக்கிறது, அவற்றை நீங்கள் இப்போழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாய் பேசாமல், தாம் கேள்வி பட்டவை யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப் படுத்துவார். (பைபிள் யோவான் 16:12…4) மேலும் காண்க: உபாகமம் 18:18,19 யோவான் 14:7,8)

3. மறுமை கோட்பாடு:

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆகவேண்டும். அன்றியும் இறுதி தீர்ப்பு நாளில்தான் உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும். எனவே, நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவரே வெற்றியடைவார். (அல் குர்ஆன் 3:185, 99:7-8, 67:2.)

நீ போரில் கொல்லப்பட்டால், சுவர்க்கம் அடைவாய். (பகவத்கீதை 2:37)

விவஸ்தை கெட்டுப்போன குலமும், கெட்டுப்போக செய்தவர்களும் நரகத்தை அடைவார்கள். (பகவத்கீதை 1:41)

உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத்தறித்து எறிந்து போடு. உனது சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயங்களில் ஒன்று கெட்டுப்போவது உணக்கு நலமாயிருக்கும். உன் வலதுகை உணக்கு இடரலுண்டாக்கினால், அதைத்தறித்து எறிந்துபோடு! உனது சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயங்களில் ஒன்று கெட்டுப் போவது உனக்கு நலமாயிருக்கும்.
(மத்தேயு 5:29 மாற்கு 9:43-47)


முடிவுரை:

உண்மையில் இது (திருக்குர்ஆன்) ஒரு நல்லுபதேசமாகும். எனவேää
விரும்புகிறவர் தம்முடைய இறைவனின் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். (அல் குர்ஆன் 76:29)


இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வகையான நிர்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் பிரிந்து தெளிவாகிவிட்டது. (அல் குர்ஆன் 2:258)

திருக்குர்ஆன் இறை வேதமாகும் இதில் சிறிதும் சந்தேகமில்லை.

இஸ்லாத்தில் இல்லை - கட்டாய மதமாற்றம்!

அரங்கு முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் அவர்களில் முஸ்லிம்கள் சிலர் மட்டுமே! மற்றவர்கள் சகோதர சமுதாயத்தவர்கள்.

தொலைக்காட்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி அது.

கல்லூரி மானவர்கள், குறிப்பாக முஸ்லிமல்லாத மாணவர்கள் இஸ்லாம் தொடர்பாக எந்தக் கேள்வியும் கேட்கலாம். புகழ்பெற்ற மார்க்க அறிஞர் ஒருவர் அவர்களின் கேள்விகளுக்கு விடையளிப்பார். நிகழ்ச்சி (படப்பிடிப்பு) தொடங்கியது. பார்வையாளனாக நானும் ஒரு ஓரத்தில்…!

மாணவர் ஒருவர் எழுந்து வினா ஒன்றை தொடுத்தார்.

''என்னுடைய கேள்வி சற்றுக் கடுமையாக இருக்கும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. விளக்கம் பெறவே இந்த கேள்வி. மதமாற்றத்தை இஸ்லாம் விரும்புகிறதா? கட்டாயமாக பிறரை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுங்கள் எனக் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதாமே? இது ஏன்? இது சரியா? என்று படபட வென வினாக்களை பொழிந்து விட்டு அந்த மாணவர் அமர்ந்தார்.

விளக்கம் சொல்ல எழுந்த அறிஞரின் முகத்தில் வசீகர புன்னகை.

நண்பர் ஓர் அருமையான கேள்வி கேட்டுள்ளார். போலித்தனமோ, பாசாங்கோ இல்லாமல் அவர் வெளிப்படையாகத் தன் மனதில் இருப்பதைக் கேட்டுள்ளார். அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். மதமாற்றம் குறித்த இஸ்லாமியக் கண்ணோட்டத்தினைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

''நான் குர்ஆனை முழுமையாக ஓதி உணர்ந்தவன்…! குர்ஆனில் எந்த ஓர் இடத்திலும் 'கன்வர்ட்" (Convert) மதம் மாற்றுதல் எனும் சொல்லே இல்லை. ஆனால் 'கன்வே" (Convey) எடுத்துரைத்தல், அறிவித்தல் எனும் சொல் பல இடங்களில் உள்ளது.

இஸ்லாத்தின் கொள்கைகளை பிறருக்கு எடுத்துரைக்கலாம். ஆனால் மதம் மாறும்படி வர்புறுத்தும் உரிமை யாருக்கும் இல்லை.

"மார்க்கத்தில் எந்த கட்டாயமும் இல்லை, தவறான வழியிலிருந்து நேரான வழி தெளிவாகப் பிரிக்கப்பட்டுவிட்டது." என்று அல் குர்ஆன் 02:256 கூறுகிறது.

அருள்மறை குர்ஆன் மற்றோர் இடத்தில் அழகாகக் குறிப்பிடுகிறது.

''உலகிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொண்டு கீழ்படிந்தவர் களாகவே இருக்க வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்தால் இப்பூமியில் உள்ள அனைவருமே நம்பிக்கை கொண்டிருப் பார்கள். அப்படியிருக்க, மக்கள் நம்பிக்கையாளர்கள் ஆகிவிட வேண்டும் என்று நீங்கள் அவர்களை கட்டாயப் படுத்துவீர்களா?" (அல் குர்ஆன் 10:99)

ஆகவே வற்புறுத்தல், கட்டாய மதமாற்றம் என்பது கடுகளவும், கடுகின் முனையளவும் இஸ்லாத்தில் இல்லை. அதே சமயம் மார்க்கத்தின் அடிப்படைகளை ஓரிறைக் கொள்கை, தூதுத்துவம் மறுமைச் சிந்தனை போன்றவற்றை மக்களிடம் எடுத்துரைப்பது முஸ்லிம்களின் கடமை. இஸ்லாத்தில் மனிதநேய கருத்துக்களை அது கூறும் சகோதர சமத்துவத்தைப் பிறருக்குப் புரியவைக்க வேண்டும். இறைவன் இருக்கிறான் என்பதற்கான சான்றுகளைச் சிந்தித்துப் பார்க்கும்படி சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. அப்படி தாமாக முன்வந்து நமக்கு விருப்பமான மதத்தை ஏற்கவும் பின்பற்றவும் நம்முடைய அரசியல் சாசனமும் அனுமதிக்கிறது.

அறிஞரின் இந்த விளக்கத்தை கேட்டதும் அந்த மாணவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். இஸ்லாம் குறித்து வெகுநாட்களாய் என் உள்ளத்தில் இருந்த தவறான கருத்து உங்கள் விளக்கத்தின் மூலம் நீங்கிவிட்டது. குர்ஆனின் பரந்த கண்ணோட்டத்தையும் புரிந்து கொண்டேன்.

''அல்ஹம்துலில்லாஹ்- இறைவனுக்கே அனைத்துப்புகழும்"" எனக் கூறி அறிஞர் அந்த நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

___________________________________________________________________

மத மாற்றம் அல்ல! மன மாற்றம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


மனித சமூகத்தின் ஓர் மைல் கல் ராஜ்குமார் பிரகாஷ் என்னைப் பற்றி :

நான் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகரத்தில் பிறந்தவன். எனது தந்தை பெயர் சு. பக்கிரிசாமி பிள்ளை. தாயார் பெயர் அஞ்சம்மாள். நான் ஐந்து சகோதரிகளுடனும் மூன்று சகோதரர்களுடனும் பிறந்தவன். நான் என் குடும்பத்தில் எட்டாவது நபர். நான் இந்து மதத்தை சார்ந்து இருந்தேன்.

இந்து மதம் பற்றி :

இந்து மதம் பல நூறு ஆண்டுகளாக இந்தியாவிலும் நேபாளத்திலும் உலகல் இன்னும் பல இடங்களில் பரவி இருக்கிறது. மனு என்று அழைக்கப்படுகின்ற ஒருவரால் ‘மனு தர்மம்’ என்னும் நூல் இயற்றப்பட்டு அதில் கூறப்படுகின்ற பிரதானமான ‘வர்ணாசிரம கொள்கை’ கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்துகள் திராவிடர்கள் ஆரியர்கள் என அழைக்கப்பட்டனர். 600 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட மனு தர்மம் வர்ணாசிரம கொள்கையை போதித்து இந்து மக்களிடத்தில் உயர்வு தாழ்வை ஏற்படுத்தி விட்டது. அதனால் பல நூறு ஜாதிகள் தோண்றியது. ஜாதிக்கு ஒரு கடவுள் என பல தெய்வக் கொள்கையும் தோன்றியது.

என் மனதில் ஏற்பட்ட மாற்றம்:

நான் 20 வயது கடந்த பிறகு கேரளாவில் இருக்கும் பிரசித்தி பெற்ற சபரிமலைக்கு சென்றேன். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து சென்ற அனுபவம் எனக்கு உண்டு. சபரிமலையில் தனித்தன்மையோடு விளங்கும் சபரி ஐயப்பன் விஷ்னு என்ற ஆணுக்கும் சிவன் என்ற ஆணுக்கும் பிறந்ததாக சொல்லப்படுவதை என் மனம் இயற்கைக்கு மாற்றமாக கருத துவங்கியது.

பழனிமலையில் இருக்கும் முருகன் ‘நவபாஷனம்’ என்று சொல்லப்படுகின்ற ஒன்பது வகை மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளின் கலவையோடு உண்டாக்கபட்ட கற்சிலை. அந்த முருகன் சிலைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் தொடர்ந்து செய்து வந்த காரணத்தினால் முருகனின் சிலை உடைந்துவிடும் அபாயம் ஏற்பட்டதால் பழனி தேவஸ்தானம் சிறிய வெண்கல சிலை ஒன்று செய்து அதற்கு அபிஷேகம் செய்யம் மாற்று ஏற்பாடு செய்யலானார்கள். என் மனதில் ஏற்பட்ட ஐயம் தன்னை காப்பாற்றிக் கொள்ளாத முருகன் என்னை எப்படி காப்பாற்றுவான்?

அடுத்து சிலை வழிபாடு. மனிதனால் செதுக்கபட்ட சிலைகளுக்கு நாம் ஏன் வணக்கம் செலுத்த வேண்டும். அந்த சிலையை விட அந்த சிலையை தத்ரூபமாக செதுக்கிய சிற்பி மேலானவாக தோன்றியது.

நாத்திகம்:

கடவுள் என்று யாரும் இருக்கமுடியாது என்ற நாத்திகத்தின்பால் என் கவனம் திரும்பியது. உடனே என் மனம் நிச்சயம் ஒரு கடவுள் (Super Power) இருக்கத்தான் வேண்டும். இல்லையேல் இந்த பிரபஞ்சம் சீராக செயல்பட முடியாது என எண்ணியது. கடவுள் இல்லை, கடவுளை கற்பிப்பவன் முட்டாள் என்று உரத்து கூறிய ஈ.வே.ரா. பெரியார் நிலை என்ன ஆனது? இன்று அவருடைய சிலைக்கு மாலை மரியாதை. இதை இறந்துவிட்ட பெரியார் உணர்ந்து கொள்வார் என என் மனம் ஏற்க மறுத்தது.

கிறிஸ்துவம் :

என் மனம் கிறிஸ்துவத்தின்பால் சென்றது. கிறிஸ்துவத்தின் இருபிரிவுகள் ஒன்று இயேசுவையும் மற்றொன்று இயேசுவின் தாயார் மர்யத்தையும் வணங்கி வரலாயினர். ஒருவன் தவறு செய்தவிட்டு பாதிரியிடம் சென்று பாவமன்னிப்பு பெறக்கூடிய நிலை மனிதனை பாவத்தில் இருந்து மீட்காமல் திரும்பத் திரும்ப செய்ய வழிவகுக்கிறது என என் சிற்றறிவுக்குப்பட்டது. இங்கு சிலை வணக்கம் என் மனதை நெருடியது.

இஸ்லாம் :

சிலைவழிபாட்டில் திருப்தி இல்லாத என் மனதிற்கு இஸ்லாம் சிலை வழிபாட்டை ஒழித்துவிட்டதை கண்டு ஆனந்தம் அடைந்தேன். இஸ்லாத்தில் தொழுகையில் உணவு உண்ணும் நிலை இன்னும் பல சூழலில் சகோதரத்துவம் வெளிப்பட்டது. முஸ்லிம்களிடையே சமத்துவம் நிலவியது. சாதிகள் இல்லை. அதனால் சாதி சண்டைகளும் மனித படுகொலைகளும் இல்லை. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைவனின் திருத்தூதர் அன்றி இறைவனின் குமாரர் இல்லை. இந்த கொள்கைகள் என்னை இந்து மதத்தில் இருந்து வெளிப்படுத்தி நாத்திக கிறிஸ்துவ கொள்கைகளுக்குச் செல்ல துடித்த மனதிற்கு ஒரு கடிவாளமிட்டு ‘இஸ்லாம்’ மார்கத்தின்பால் என்னை அழைத்து வந்தது. எனது 25-ம் வயதில் ஷார்ஜா நகரில் நான் இஸ்லாத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.

மன மாற்றம் :

இஸ்லாம் ஓர் மதம் அல்ல. அது ஒரு மார்க்கம் மனித வாழ்க்கை சீர்படுத்த உகந்த வாழ்க்கை நெறி. அதனால் நான் மதமாற்றம் செய்யப்படவில்லை. மனமாற்றமே அடைந்தேன். இஸ்லாம் வாழ்வில் ஒரு மனிதன் சந்திக்கும் அனைத்து விசயங்களுக்கும் தீர்வு சொல்கிறது. குர்ஆனில் புதைந்து கிடக்கும் பல அறிவியல் உண்மைகள் இந்த வேதம் நிச்சயமாக தீர்க்கதரிசி முஹம்மது(ஸல்) அவர்களால் வழங்கப்பட்டது அல்ல. இது ஓர் இறைவனின் தெளிவான வழிகாட்டுதல் என விளங்க முடிந்தது.

முஸ்லிம்கள் பற்றி :

இஸ்லாம் கூறக்கூடிய வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றி நடப்பவர்கள் முஸ்லிம்கள் ஆவர். ஆனால் துரதிருஷ்டவசமாக பல முஸ்லிம்கள் இஸ்லாத்தின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக நடப்பதை பார்க்கிறோம். தமிழ்கூறும் சகோதர சகோதரிகளுக்கு நான் அன்போடு தெரிவித்துக் கொள்வது என்றவென்றால் நீங்கள் இஸ்லாத்தைப் பாருங்கள். இஸ்லாமியரைப் புரிந்து கொள்ள முயல வேண்டாம். நீங்கள் ஓர் இறையின் புனித வேதமான அல்குர்ஆனையும், முஹம்மது(ஸல்) அவர்களின் பொன் மொழிகளாகிய ஹதீஸையும் படித்து ஆய்வு செய்து உங்கள் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஆக்கிக் கொள்ள வேண்டுமாய் அன்போடு அழைக்கின்றேன்.

அன்பான வேண்டுகோள் :

முஸ்லிம் சகோதர சகோதரிகளே! இனியாவது இஸ்லாத்தை அனைத்து அம்சங்களிலும் பின்பற்றி நடப்போமாக! இன்னும் மாற்றுமத சகோதர சகோதரிகளுக்கு இந்த புனித பணியை அதாவது அழைப்புப்பணியை துரிதமாக செய்வோமாக என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அப்துர் ரஹ்மான் (ராஜ்குமார் பிரகாஷ்)
திருவாரூர்

Thursday, March 24, 2005

தாஃவா – அழைப்புப் பணி!

இறைவனின் திருப்பெயரால்

தாஃவா – அழைப்புப் பணி

இன்று உலகில் எண்ணற்ற மக்கள் வாழ்க்கையில் வெறுப்புற்று, நம்பிக்கையிழந்து, நிம்மதியின்றி அமைதியை தேடி ஓடுகின்றனர். ஆனால், அவர்களுக்கு அமைதி கிடைத்தபாடில்லை. ஏனென்றால் அவர்கள் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்காதவரை அமைதி பெறமாட்டார்கள். முஸ்லிம்கள் தங்களுடைய முழு முதற்கடமையை செய்யத்தவறியதன் விளைவே இது. தாஃவா – அழைப்புப்பணியை அவர்கள் சரிவர செய்யவில்லை.

தாஃவா என்பது மக்களை அல்லாஹ்வின் பால் அழைப்பது. வணக்க வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்வது. அவன் காட்டித்தந்த சீரிய வழியின்பால் வாழ்வது, தீமை மற்றும் இணைவைப்பதைவிட்டும் முற்றிலுமாக விலகுவது ஆகும்.

இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் - சுரத்துல் அன்பியா – நபிமார்கள் குறித்த அத்தியாயம் 21:வசனம் 25

“(நபியே!) உமக்கு முன்னர் இப்பூவுலகில் வாழ்ந்த நம் தூதர்கள் அனைவரும் உமக்கு வஹீயாக கிடைத்த அதே செய்தியையே அவர்களும் பெற்றார்கள். அதாவது “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை ஆகவேää அவனுக்கே முற்றிலும் வழிபட்டு நடங்கள்”

எனவே, தாஃவா என்பது மக்களுக்கு புரியக்கூடிய விதத்தில் சரியான மொழியில் அவர்கள் திருப்தி கொள்ளுமாறு அமைய வேண்டும். மேலும், அவர்கள் மேல் உள்ள அன்பின் காரணமாக அவர்களும் நம்மைப் போன்று நேர்வழியல் சென்று நாளை மறுமையில் நம்மருகே செர்க்கத்தில் இருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும் தாஃவா செய்ய வேண்டும்.

இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான் சுரத்துன் நஹல் - தேனீக்கள் பற்றிய அத்தியாயம் 16:வசனம் 125

நபியே நீர் மனிதர்களை விவேகத்தைக் கொண்டு மற்றும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டும் உமதிரட்சகனின் பக்கம் அழைப்பீராக - அன்றியும் எது அழகானதோ அதைக் கொண்டு நீர் அவர்களுடன் விவாதம் செய்வீராக!

மேலும் சுரத்துல் ஃபுஸ்ஸிலத் அத்தியாயம் 41:வசனம் 33ல் இறைவன் கூறுகின்றான்

அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்துää நல்ல அமல்களை செய்துää “நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்களில் நின்றும் உள்ளேன்” என்று கூறுகிறாரோ அவரை விட அழகிய சொல் சொல்பவர் யாருமில்லை

ஆகää இந்த தாஃவா பணியை தனிநபராகவோ அல்லது கூட்டமைப்பாகவோ இருந்து செய்யலாம். தனிநபராக இருந்து செய்வது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால்ää அந்நபர் இஸ்லாம் குறித்த தெளிவான அறிவு பெற்றவராக இருத்தல் வேண்டும். கூட்டமைப்பாக செய்பவர்கள் ஒரு அழைப்பு மையத்தை இஸ்லாமிய அறிஞர்கள்ää ஆராய்ச்சியாளர்கள்ää சமூகவியாலர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு அமைக்க வேண்டும். அவர்கள் சொற்பொழிவுகளுக்குää விவாதங்களுக்குää ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு வருடம் முழுவதுமுக்குரிய செயல்களை வகுத்து ஒரு செயல் திட்டம் ஏற்படுத்த வேண்டும். பிற சமயத்தவர்கள் மற்றும் பிறபகுதியிலுள்ள அழைப்பாளர்கள் எந்நேரமும் அணுகி தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் விதமாக செயல்பட வேண்டும். புத்தகங்கள்ää ஆடியோää வீடியோ கேஸட்;டுகள் கொண்ட நூலகம் ஏற்படுத்த வேண்டும்.

தாஃவாவின் முதல் பணியாக கலிமா ஸலவாத்தை எடுத்துரைக்க வேண்டும்.

வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தூதராகவும், நல்லடியாராகவும் உள்ளார் என்பதாகும்.

முதலில் கூறவேண்டியது:
1) அல்லாஹ் இருக்கின்றான், அவன் தனித்தவன் (இணைதுனையற்றவன்), அவன் பண்புகள்
2) முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மை, உண்மை
3) திருக்குர்ஆன் கூறும் விஞ்ஞான அற்புதங்கள், எவ்வாறு அவை பிற்காலத்தில் நிரூபிக்கபட்டன அது உலக மாந்தருக்கு விடும் சவால் 'இது போன்ற புத்தகத்தை உங்களால் இயற்ற முடி யுமா?" என்பது
4) மறுமை நாள், மறுமைய வாழ்க்கை, மீண்டும் அனைவரும் உயிர்தெழுப்பப்படுவது, நியாய தீர்ப்பு வழங்குவது
5) முஹம்மது ரஸ_ல்(ஸல்) அவர்களின் தோழர்களுடைய சிறப்புகள்ää தியாகங்கள்
6) இஸ்லாமிய வாழ்க்கை முறைää அன்றாட பிரச்சனைகளுக்குரிய தீர்வுகள்
7) இஸ்லாம் உலகில் ஏற்படுத்திய புரட்சி, தாக்கம்

• சர்ச்சைக்குரிய விசயங்கள்ää அரசியல்ஈ மற்றும் முஸ்லிம்கள் நம் நாட்டில் படும் துன்பங்கள குறித்தெல்லாம் பேசி நேரத்தை வீணடிக்கக் கூடாது
• நாம் அறியாத விசயங்கள் குறித்து பேசுவதும் கூடாது
• நாம் கூற விரும்புவதை தெளிவாக அழகிய முறையில் எடுத்துக் கூறவேண்டும்.
• நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும்
• நல்லமுறையில் அவர்களிடம் விவாதம் செய்யவேண்டும். நாம் அளிக்கும் பதில் அவர்களை திருப்தி செய்யுமாறு இருக்க வேண்டும்
• தவறுகளை பொறுக்க வேண்டும். பொறுமையோடு அவர்கள் கூறுவதை செவிமடுக்கவேண்டும்
• குர்ஆன் மற்றும் புத்தகங்களை பரிசாக அளிக்கவேண்டும்
• வீண் விமர்சனங்களை ஒதுக்கித் தள்ள வேண்டும்
• இஸ்லாத்தை மற்றும் நம்மை பிறர் ஏசினால் பொறுமை காக்கவேண்டும்
• உங்கள் சொற்பொழிவில் முரண்பாடு இருக்கவே கூடாது
• நீங்கள் கூறுபவற்றை நீங்கள் பின்பற்றுபவராக இருக்க வேண்டும். உதாரணம்: தாடி
• வாக்கு தவறாமை கடைபிடிக்கவேண்டும்
• நாம் அறியாத விசயங்களைக் குறித்து கேட்கப்பட்டால் எதையேனும் கூறி அவர்களை குழப்புவதை விட்டுவிட்டு 'எனக்கு தெரியாது படித்துவிட்டு கூறுகிறேன்" என்று கூறுவதே நேர்மையான சிறந்த பதிலாகும்.


இஸ்லாம் குறித்து பிற சமயத்தவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை இங்கு கூற விரும்புகிறேன்.

1. இஸ்லாம் என்பது முற்றிலுமாக அல்லாஹ்விற்கு அடிபணிவது
2. அல்லாஹ் என்பது 'ஒரே கடவுள்" என்பதற்குரிய அரபிச் சொல். அவன் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாது உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளின் இறைவன் ஆவான்.
3. இஸ்லாம் முஹம்மது ரஸ_ல்(ஸல்) அவர்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்கம் அல்ல. ஆதி மனிதர் ஆதம்(அலை) முதல்ää முதல் நபி நூஹ்(அலை) தொடர்ந்து வந்த அனைத்து தூதர்களும் போதித்த மார்க்கம் ஆகும்
4. இஸ்லாம் என்பதன் உண்மையான அர்த்தம் சாந்திää மற்றும் சமாதானம் என்பது குறித்து எடுத்துக் கூறுவது
5. குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வாக்கு. மனித குலத்திற்கு அவன் அருளிய இறுதிச் செய்தி
6. இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை. ஏற்றத்தாழ்வு இல்லைää அனைவரும் சமம்
7. இஸ்லாம் எளிய மார்க்கம்ää சகிப்புத் தன்மையை வலியுறுத்துகிறது.
8. தனிமனித உரிமைகளை இஸ்லாம் பேனுகிறது. நியாயத் தீர்ப்பு நாளின் முக்கியத்துவம் - ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது
9. இஸ்லாம் மனிதனின் உடல்ரீதியான வெளிப்படையான பிரச்சனைகளுக்கும் உள்ள ரீதியான ஆன்மீகப் பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது
10. சில சமூகää நாட்டில் நிலவும் பழக்க வழக்கங்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை
11. இன்றைய சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளான வறுமைää வன்முறைää வீடற்றோர்ää கொலைää கொள்ளைää பாலியல் நோய்கள்ää மனைவியை துன்புறுத்துவதுää குழந்தைகளை வதை செய்வதுää குடிää போதைää விபச்சாரம் மற்றும் குடும்பத்தில் பிளவு போன்ற அனைத்துவிதமான பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் தீர்வு தருகிறது
12. பெண்களுக்கு தனி அந்தஸ்துää கௌரவம் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப் பட்டுள்ளது. பெண்கள் குறித்து ஒரு தனி அத்தியாயமே உள்ளது

சு10ரா முஹம்மது(ஸல்) அத்தியாயம் 47: வசனம் 38

அவனுடைய கட்டளைகளை நீங்கள் புறக்கணிப்பீர்களானால் உங்களை அழித்து உங்களையல்லாத வேறு சமூகத்தாதை உங்கள் இடத்தில் அவன் மாற்றிவிடுவான். பின்னர் அவர்கள் உங்களைப் போன்றவராக இருக்கமாட்டார்கள்.

தாஃவா செய்யும் முறைகள்ää உத்திகள் என்னவென்றால்

1. சிறு சிறு பிரசுரங்கள் பல்வேறு தலைப்புகளில் வெளியிடுவது. WAMI, Saudi வெளியிட்டது போன்று. இது போன்ற பிரசுரங்கள் வெளியிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம், வார்த்தைகள் அரபியில் இல்லாது அந்தந்த மொழியில் இருத்தல் வேண்டும். உதாரணம் - அல்லாஹ் - இறைவன், ஈமான் - நம்பிக்கை, தக்வா - இறையச்சம், பயபக்தி, நிக்காஹ் - திருமணம், நபி - இறைத்தூதர்
2. புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் வெளியிடுவது
3. பிரசுரங்கள், புத்தகங்களை கிறித்துவர்கள் போன்று நாமாக சென்று பேருந்து நிலையம், இரயில் நிலையம், ஜன நடமாட்டம் உள்ள மார்க்கெட் போன்ற இடங்களில் விநியோகிப்பது
4. புத்தகத்திருவிழா - Book fair-ல் ஒரு கடையைப் பிடித்து விலை கூடுதலாக உள்ள இஸ்லாமிய புத்தகங்களை சலுகை விலையில் விற்பது – சில சிறு புத்தகங்களை இலவசமாக அளித்து வாங்கத் தூண்டுவது.
5. தெருமுனைப் பிரச்சாரம் - தி.க, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் போன்று சிறிய நாற்காலியில் மெகா போனுடன் பிரச்சாரம் செய்வது - குறிப்பாக ஜனநடமாட்டம் உள்ள இடங்கள் மற்றும் ஏழை மக்கள் (தலித்) வாழும் சேரிகளில் நடத்துவது
6. ஈத் பெருநாளை முன்னிட்டு பிற சமுதாயத்தவரை அழைத்து விருந்து பரிமாறி பிரசங்கம் செய்வது, கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்துவது
7. மீலாது நபி விடுமுறையை பயன்படுத்தி முஹம்மது ரஸ_ல்(ஸல்) அவர்களைப்பற்றி எடுத்துக் கூறுவது
8. கேபிள் டிவி நெட்வொர்க்கை பயன்படுத்தி தினமும் இஸ்லாமிய சொற்பொழிவு கேஸட்டுகளை ஒளிபரப்புவது - Dr.Zakir Naik மும்பையில் செய்வது போன்று.
9. ரமளான் மாதத்தில் அனைத்து இயக்கத்தினரும் தனித்தனியாக ஸஹர் நேரத்தில் ஒளிபரப்பாது, மதியம் ஒன்று இரவு ஒன்று என இஸ்லாமிய ஒளிபரப்பு - குறைந்தபட்சம் அரை மணி நேரம், விளம்பரம் எதுவும் இடையில் இல்லாது, இயக்கப் பெயர், தனிநபர் பெயர் இல்லாது நடத்துவது
10. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பிற சமுதாயத்தவரை அழைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துவது
11. வருடம் ஒரு முறை அல்லது இருமுறை இரத்ததான, மருத்துவ முகாம் ஏற்பாடு செய்துää அந்நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு சமயத்தவர்களை அழைத்து, அதில் பிரசங்கம் செய்துவிட்டு நிகழ்ச்சியை நடத்துவது
12. மாதந்தோறும் ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு சென்று கிறித்துவர்கள் போன்று நோயாளிகளை நலம் விசாரித்து ஆறுதல் கூறி பிரச்சாரம் செய்வது
13. இயற்கை சீற்றங்களால் மக்கள் அவதிப்படும் நேரம் அங்கு முஸ்லிம் என்ற அடையாளத்தோடு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப்பணிகளை மேற்கொள்வது. உதாரணம்- பூஜ், குஜராத் பூகம்ப நிவாரணம் - முஸ்லிம் இளைஞர்கள் இரத்த தானம், இந்துக்களுக்கு தாமாக முன்வந்து செய்ததன் விளைவு - தொழுகை நடத்த விடாமல் தடுக்கப்பட்ட பள்ளிவாசல் இந்துக்களால் முஸ்லிம்களுக்கு திறந்து விடப்பட்டது.
14. முக்கிய செய்தித்தாள்களில் வாரம் ஒரு முறை முக்கிய தலைப்பின்கீழ் ஹதீஸ்களை வட்டார மொழியில் ஒரு தலைப்பின் கீழ் முதல் பக்கத்தில் வெளியிடுவது - உதாரணம் தினமணி - IFT வெளியீடு
15. ஒவ்வொரு ஊரிலும் ஒரு பொது பெயரில் நூலகம் ஒன்றை ஏற்பாடு செய்து இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் பொது புத்தகங்களை அனைவரும் (அனைத்து கமயத்தவரும்) வந்து படிக்குமாறு ஏற்பாடு செய்வது. உதாரணம் - சகோ. அபுஆஸியா நாகர்கோவிலில் “The Truth" என்ற பெயரில் நூலகம் திறந்து உள்ளார்.


Coming Soon...